ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் ஆதார் அட்டை தனிநபர் அடையாள அட்டைகளுள் முதன்மையானதாக உள்ளது. அத்துடன் இதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இதில் பெயர் மற்றும் முகவரியை எத்தனை முறை மாற்றலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஆதார் கார்டு
இந்தியாவில் ஆதார் அட்டை தற்போது அனைத்து பயன்பாடுகளுக்கும் இன்றியமையாததாக உள்ளது. இதையடுத்து அரசின் நலத்திட்டங்கள் கூட ஆதார் கார்டு மூலமாக தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர் சார்ந்தவைகளுக்கு ஆதார் எண் இணைக்க வேண்டியுள்ளது. அதனால் இதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் உங்களின் விவரங்கள் சரியானதாக இல்லை என்றாலோ அல்லது முகவரி, பெயர் உள்ளிட்டவை மாற்ற வேண்டும் என்றாலோ UIDAI ஆணையம் மாற்றங்களை செய்ய அனுமதி வழங்குகிறது.
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை – முழு விவரங்கள் இதோ…!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தான் மக்களுக்கு ஆதார் அட்டையை வழங்குகிறது. ஆனால் ஆதார் அட்டையில் மீண்டும் மீண்டும் மாற்றி கொண்டே இருக்க முடியாது. ஆதார் அட்டையை மாற்றுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு UIDAI ஒரு குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது. இந்த குறிப்பிட்ட வரம்புக்குள் தான் மாற்றங்களை செய்ய முடியும். இப்போது ஆதாரில் உங்கள் பெயர் தவறாக இருந்தாலோ அல்லது திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்களின் பெயரின் இன்ஷியலை மாற்ற விரும்பினாலோ இதனையும் UIDAI அனுமதிக்கிறது.
Exams Daily Mobile App Download
ஆனால் தங்களின் பெயரை அடிக்கடி மாற்ற முடியாது. தங்களின் பெயரை 2 முறை மட்டுமே திருத்த முடியும். அதற்கும் மேல் நீங்கள் திருத்த விரும்பினால் UIDAI அலுவலகத்திற்கு நேரில் சென்று மேற்கொள்ளலாம். இதையடுத்து நீங்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டால் முகவரியை மாற்ற முடியும். ஆனால் இதிலும் ஒருவர் ஒரு முறை மட்டுமே அவர்களின் முகவரியை மாற்ற முடியும். அதனால் தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டுமே தங்களின் முகவரியை மாற்ற கொள்ள வேண்டும். இல்லையெனில் நீங்கள் UIDAI அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.