TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய தகவல்!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள்- 1, மற்றும் 2 ஆகியவற்றுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பங்களில் வரும் 27ம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்:
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டும் நடக்க உள்ளது. மேலும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II 2022 ஆம் ஆண்டுக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வாயிலாக 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. மேலும் விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் 26.04.2022 வரை வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு 2,30,878 பேரும், தாள் II க்கு 4,01,886 என மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதனால், விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்று மேற்கண்ட இரண்டு தாள் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, திருத்தங்கள் செய்ய விரும்புவோர் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தின் மூலம் திருத்தங்களை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருத்தங்கள் செய்த பிறகு சமர்ப்பிக்கும் பொத்தானை அழுத்தி உறுதி செய்யாவிட்டால் முந்தைய விவரங்களே ஏற்று பரிசீலிக்கப்படும். இதையடுத்து விண்ணப்பத்தை சமர்ப்பித்து பணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே மாற்றங்களை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரி, கல்வித்தகுதி ஆகியவற்றில் மாற்றம் செய்ய முடியாது. மேலும், தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றிலும் எந்த மாற்றமும் செய்ய இயலாது என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.