TN TET தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர் தகுதித்தேர்விற்கான முதல் தாளை கணினி வழியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்காக தேர்வு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக பயிற்சித் தேர்வினையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு:
தமிழகத்தில் உள்ள ஒன்றிய ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுகின்றன. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் 7 ஆம் தேதி தான் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்தான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பிறகு ஏப்ரல் 26 ஆம் தேதி வரைக்கும் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
மேலும், ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது. ஆசிரியர் தகுதி தேர்வு மொத்தமாக இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாளை டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி பயின்றவர்களும், இரண்டாம் தாளை பி.எட் ஆசிரியர் பயிற்சி பயின்றவர்களும் எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், முதல் தாளிற்கான முதற்கட்ட தேர்வு கணினி வழியில் மட்டுமே நடத்த வேண்டும் என ஆசிரியர் தகுதி வாரியம் அறிவித்துள்ளது.
AVANI சென்னை புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.90,000/- || டிகிரி தேர்ச்சி போதும
இதுமட்டுமல்லாமல், கணினி வழியில் தேர்வெழுத தேர்வாளர்கள் பயிற்சி பெற வேண்டும் என்பதால் பயிற்சித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அதாவது, ஆசிரியர் தகுதி தேர்வு எழுத இருப்பவர்கள் கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பினால் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கொடுக்கப்படும் பயிற்சி தேர்வில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சியினை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.