தமிழகத்தில் பஸ் டிரைவர் & கண்டக்டர்கள் கவனத்திற்கு – போக்குவரத்து துறை முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் பஸ் டிரைவர் & கண்டக்டர்கள் கவனத்திற்கு - போக்குவரத்து துறை முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் பஸ் டிரைவர் & கண்டக்டர்கள் கவனத்திற்கு - போக்குவரத்து துறை முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் பஸ் டிரைவர் & கண்டக்டர்கள் கவனத்திற்கு – போக்குவரத்து துறை முக்கிய உத்தரவு!

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பணியின் போது பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணிக்க கண்டக்டர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும் டிரைவர், கண்டக்டர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் மற்றும் தங்களது கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முக்கிய உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருவதால், தமிழக அரசு தடுப்பு விதிமுறைகளை கையில் எடுத்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக சென்னையில் 939 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை புறநகரில் கொரோனா தீவிரமெடுத்துள்ளதால், மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் சார்ந்த திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லைப்புற பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது. கொரோனா பரவலை முழுமையாக ஒழிக்கும் பொருட்டு, அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் பொது இடங்களில், மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரையில் கூடிய விரைவில் மெட்ரோ ரயில் திட்டம்? அரசு தரப்பு விளக்கம்!

இந்த வகையில் அனைத்து மாநகர போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்கள் அனைவரும் டிரைவர், கண்டக்டர்கள் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து டிரைவர், கண்டக்டர்கள் தங்களது கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும். மேலும் கண்டக்டர்கள் பணியின் போது எச்சில் தொட்டு டிக்கெட் வழங்குதலை அறவே தவிர்த்திட வேண்டும். மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களை அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் டிரைவர், கண்டக்டர்கள் தவறாது பின்பற்றுவதை உறுதி செய்தல் வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!