தமிழகத்தில் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடுவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடுவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி:

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த வேளையில் இரண்டு தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்த ஆரம்பிக்கப்பட்டது. இந்த தடுப்பூசிகளை தொடர்ந்து கோர்பிவேக்ஸ் மற்றும் ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகளை போட ஆரம்பிக்கப்பட்டது. தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்திலும் கோவோவேக்ஸ் தடுப்பு மருந்து இணைக்கப்பட்டு விட்டது.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் மட்டுமே இதுவரை 95% பொதுமக்கள் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை 75% மக்கள் செலுத்தியுள்ளனர். கொரோனா தடுப்பூசியை செலுத்தினால் மட்டுமே பொது இடங்களுக்கு வர வேண்டும் எனவும், அனைவரையும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது. ஆரம்பத்தில் 18 வயது முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்பு 12 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கோவோவேக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் என்ன கிடைக்கிறது?

இதனையடுத்து 12 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்களும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை முதல் மற்றும் இரண்டாம் தவணையாக செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதே போன்று 15 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களும் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இனி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது எனவும், விரும்பினால் தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!