EPFO திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்கள் கவனத்திற்கு – நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!

0
EPFO திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்கள் கவனத்திற்கு - நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!
EPFO திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்கள் கவனத்திற்கு - நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!
EPFO திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்கள் கவனத்திற்கு – நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!

இந்தியாவில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு வகையான பலன்களை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. இதையடுத்து தற்போது ஓய்வூதிய வயதை உயர்த்துவது தொடர்பாக “விஷன் 2047” என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விஷன் 2047

இந்தியாவில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் ஓய்வூதிய பலன்களை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. இதையடுத்து EPFO நிறுவனத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி PF கணக்கின் கீழ் பிடித்தம் செய்யப்படும். அதாவது EPFO நிறுவனத்தின் கீழ் பயன்பெற PF கணக்கு தொடங்கப்பட வேண்டும். மேலும் இந்த பலன்கள் சில விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்படுகிறது. இதில் குறிப்பாக இந்த பலன்களை பெற ஒரு நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? ஜார்கண்ட் முதல்வர் அறிவிப்பு!

அத்துடன் ஒரு ஊழியர் ரூ.15000க்கு அதிகமாக சம்பளம் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வகையான விதிமுறைகள் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் 2047ம் ஆண்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 140 மில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய நாடானது வயதான சமுதாயத்தை கொண்டு விளங்கும் ஜப்பான் சீனா போன்ற நாடுகளை போல மாறும் என்று கூறப்படுகிறது. அதனால் ஓய்வூதிய நிதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்று கூறப்படுகிறது. அதனால் வேலைவாய்ப்பு சந்தையை பாதுகாப்பாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் EPFO அமைப்பு “விஷன் 2047” அறிக்கை ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்துவது தொடர்பாக மற்ற நாடுகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதிய தொகை நீண்ட காலத்திற்கு வைப்பு வைக்கப்படும். இதனால் ஓய்வூதிய நிதி அதிகரிக்கக்கூடும். அத்துடன் நாட்டில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் “விஷன் 2047” அறிக்கை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!