Axis வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீட்டு, கார் கடன்களுக்கான EMI உயர்வு!
ஆக்சிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களின் வீட்டுக் கடன், கார் கடன் போன்றவற்றிற்கான EMI ஐ அதிகரித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.
EMI உயர்வு:
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி தற்போது விளிம்புச் செலவுக் கடன் விகிதத்தை (MCLR) உயர்த்தியுள்ளது, இது குறித்து மே 18ம் தேதியான இன்று காலை ஒரு அறிவிப்பில் கூறியுள்ளது. அதன்படி 35 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று ஆக்சிஸ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் இன்று முதல் அதாவது மே 18 முதல் அமலுக்கு வரும் என்று வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆக்சிஸ் வங்கியின் MCLR உயர்வு மூலம் கடன் வட்டி அதிகரிக்கும்.
Exams Daily Mobile App Download
Axis வங்கியின் ஒரு மாத MCLR விகிதம் இப்போது 7.55 சதவீதமாக உள்ளது. இதற்கு முன் 7.20 சதவீதமாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு எம்சிஎல்ஆர் 7.30 சதவீதத்தில் இருந்து 7.65 சதவீதமாகவும், ஆறு மாதங்களுக்கு ஆக்சிஸ் வங்கி எம்சிஎல்ஆர் விகிதம் 7.35 சதவீதத்தில் இருந்து 7.70 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் 7.40 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு காலத்திற்கான முக்கிய கடன் விகிதம் 7.55 சதவீதத்தில் இருந்து 7.90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
TNPSC Group 2 தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு அரிய வாய்ப்பு – உங்களுக்கான மாதிரி தேர்வு..!
ரெப்போ விகிதங்கள் அதிகரித்த பிறகு, முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தங்கள் MCLR ஐ உயர்த்த தொடங்கியுள்ளது. MCLR அல்லது மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் ரேட் என்பது பெஞ்ச் மார்க் வட்டி விகிதமாகும். இது வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்க அனுமதிக்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். இந்திய ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்படாத வரையில், வங்கிகள் இந்த விகித வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகித உயர்வு வங்கிகளுக்கான நிதிச் செலவை உயர்த்தியதால் MCLR மேலும் உயர வாய்ப்புள்ளது.