தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அட்டை பெறுவதில் தாமதம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் அட்டைகள் பெற விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 3 மாதங்களாகியும் கிடைக்காததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள்:
தமிழகத்தில் உள்ள மக்களுக்கு அரசின் பல நலத்திட்டங்கள் ரேஷன் அட்டைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் என மாதந்தோறும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. மேலும் அரசின் பல நலத் திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களை சென்று அடைகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன் மூலம் மக்கள் எந்த இடத்திலும் இருந்தாலும் ரேஷன் பொருள்களை வாங்கி கொள்ள முடியும். ரேஷன் பொருள்கள் கொடுப்பதில் உள்ள நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க ஆதார் மற்றும் அலைபேசி எண் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டன. இந்த கார்டுகள் தொலைந்து விட்டால் அல்லது முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற சேவைகளை பெற டூப்ளிகேட் ஸ்மார்ட் கார்டு பெற விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – இனி இவர்கள் பொருட்கள் வாங்க முடியாது!
திருவாடானை தாலுகாவில் 85 ரேஷன் கடைகள் உள்ளன. அதில் இதுவரை டூப்ளிகேட் கார்டு கேட்டு பலர் விண்ணப்பித்து 3 மாதங்களுக்கு மேலாகியும் ரேஷன் கார்டுகள் கிடைக்கவில்லை. அது குறித்து மக்கள் பல புகார்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து சிவில் சப்ளை அலுவலர்கள் கூறுகையில், நகல் மின்னணு ஸ்மார்ட் கார்டு அந்தந்த மாவட்டங்களில் அச்சிடப்படுகிறது. ராமநாதபுரம் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் பயிற்சிக்காக வெளியூரில் இருக்கின்றனர். அதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் விண்ணப்பித்த அனைவருக்கும் நகல் கார்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.