தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ரீடிங் மாரத்தான் அறிவிப்பு!
தமிழகத்தில் மாணவர்களிடையே கற்றல் இடைவெளியைக் குறைக்க “தமிழ்நாடு இல்லம் தேடி கல்வி திட்டம் 2022” என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தான் நடைபெற உள்ளது.
ரீடிங் மாரத்தான்
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. அதனால் மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் இதில் கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவாக இருந்தது. அதன் காரணமாக மாணவர்களுக்கிடையே கற்றல் திறனில் இடைவெளியை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் “தமிழ்நாடு இல்லம் தேடி கல்வி திட்டம்” என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இத்திட்டத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஜூன் 1 முதல் ஜூன் 22ம் தேதி வரை இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மாரத்தானில் இணைவதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
1. இதற்கு முதலில் google read along App என்பதை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. இதில் தமிழ் அல்லது English மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. இதையடுத்து தங்களது வட்டாரத்திற்கான யூனிக் கோட் ஐ பதிவு செய்ய வேண்டும்.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? கல்வித்துறை அறிவிப்பு!
4. அடுத்ததாக உங்களின் மாவட்டத்திற்குரிய block code என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
5. கூட்டாளர் குறியீடுகள் என்ற மெனுவை கிளிக் செய்து கூட்டாளர் சேர்த்தல் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
6. இறுதியாக நீங்களும் ரீடிங் மாரத்தானில் கலந்து கொள்ளப்படுவீர்கள்