அனைத்து பள்ளி & கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு!
வரும் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்பட இருக்கும் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய கொடி
நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மத்திய அரசாங்கம் ஹர் கர் திரங்கா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு மாணவர்களின் வீட்டிலும் தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றும் பிரச்சாரமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இப்போது இந்த ஹர் கர் திரங்கா திட்டத்தின் கீழ் சுதந்திர தின விழா நாட்களில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்று கர்நாடகா அரசாங்கம் அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்த அறிவிப்பில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் ‘ஹர் கர் திரங்கா’ திட்டத்தின் கீழ் தேசிய கொடி ஏற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கர்நாடக உயர்கல்வி அமைச்சர் சி என் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு – இட ஒதுக்கீடு ரத்து! அரசு அதிரடி அறிவிப்பு!
மேலும், மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் அரசு, அரசின் உதவி பெறும் அல்லது உதவிபெறாத கல்லூரிகள் உட்பட டிப்ளமோ கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் மூவர்ணக்கொடியை ஏற்றி தங்கள் தேசிய பெருமையை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வகுப்புகளின் போது இது குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தவும் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.