அனைத்து ஓய்வூதியர்கள் கவனத்திற்கு – சூப்பரான சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!
இந்தியாவில் அரசு ஊழியர்கள் அல்லது தனியார் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கிறது. இதையடுத்து தற்போது இந்த ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் உதவும் வகையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதனை பற்றி விரிவாக பார்ப்போம்.
சேமிப்பு திட்டம்
இந்தியாவில் ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக அரசு பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் சேமிப்பு திட்டங்களில் தங்களின் முதலீடுகளை செலுத்தும்போது முதிர்வு காலத்தில் அந்த சேமிப்பு பணம் பேருதவியாக உள்ளது. இதையடுத்து தற்போது வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த திட்டங்களில் உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது எந்த திட்டம் உங்களுக்கேற்ற முதலீடு திட்டமாக உள்ளது என்று பார்த்து முதலீடு செய்து கொள்ளலாம்.
முதலாவதாக பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா என்ற திட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கணக்கை தொடங்கலாம். இதில் ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதம் கிடைப்பதுடன் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் மார்ச் 2023 வரை நடைமுறையில் இருக்கும். இதையடுத்து சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் என்ற ஐந்தாண்டு கால சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதம் பெற முடிகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் மட்டுமே முதலீடு செய்ய முடிகிறது. இந்த திட்டத்தில் முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறும் வசதிகளும் உள்ளது.
இதனை தொடர்ந்து ஃப்ளோட்டிங் வட்டி விகித சேமிப்பு பத்திரம் என்ற திட்டத்தில் வட்டி விகிதம் 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்படுகிறது. இதில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதலீடு செய்து 7 வருடங்களுக்கு பிறகு திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அடுத்ததாக தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் என்ற திட்டத்தில் ஆண்டுக்கு 6.6% வரை வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் கூட்டு உரிமையின் கீழ் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் மற்றும் ஒற்றை உரிமையின் கீழ் ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடிகிறது. இறுதியாக ஃபிக்சட் டெபாசிட் என்ற ஐந்தாண்டு கால திட்டத்தில் ஆண்டுக்கு 6.5% வட்டி விகிதம் வரை பெற முடிகிறது. இதன் முதிர்வு காலம் முடிவடையும் போது மீண்டும் புதுப்பித்து கொள்ளலாம். மேலும் வரியை சேமிக்க விரும்பும் ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெற்று கொள்ளலாம்.