அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதாருடன் இணைக்க ஜூன் 30 கடைசி நாள்!
ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி நாள் முடிவடைந்த நிலையில் தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு உதவும் வகையில் அதன் காலக்கெடு 2022 ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் – ஆதார் இணைப்பு:
இந்தியாவில் ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை போன்று ரேஷன் கார்டும் முக்கிய ஆவணமாக விளங்குகிறது. இந்த ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்கள் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். கடந்த கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்கள், நிவாரண தொகைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமும் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல், அரசாணை வெளியீடு? அரசு சார்பு செயலாளர் விளக்கம்!
இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் எந்த மாநிலங்களில் இருந்தாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம். இதற்கு முதலில் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும். அரசு ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க கால மார்ச் 31 வரை அவகாசம் வழங்கியது. இந்த நிலையிலும் இன்னும் பலர் இந்த நடைமுறையை முடிக்கவில்லை. இதனை கருத்தில் கொண்டு இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு 2022 ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
BECIL நிறுவனத்தில் ரூ.53,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வாயிலாக எளிதாக ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்கலாம். uidai.gov.in என்பதில் start now’ என்பதைக் கிளிக் செய்து முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.