அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மொபைல் எண்ணை மாற்றும் வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. அதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் அப்டேட்டாக வைத்து கொள்வது அவசியம். தற்போது ரேஷன் கார்டில் மொபைல் எண் மாற்றும் வழிமுறைகள் குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஊரடங்கு மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணங்களை பெற்று மக்கள் பயனடைந்தனர். இந்த குடும்ப அட்டை தரநிலை குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்து 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் பயன் பெற ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க கால அவகாசமும் வழங்கப்பட்டது. தற்போது கால அவகாசம் ஜூன் 30 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை போன்று ரேஷன் கார்டும் முக்கிய ஆவணமாக உள்ளது. இத்தகைய ஆவணத்தை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். அதாவது புதிய குடும்ப உறுப்பினர்களை சேர்த்தல், குடும்ப உறுப்பினரை நீக்குதல், இறந்தவர்களின் பெயரை நீக்குதல் போன்ற அப்டேட்டுகளை கட்டாயம் செய்ய வேண்டும்.
குறிப்பாக மொபைல் எண்ணை அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். அப்போது தான் எளிதாக பிற விவரங்களை மாற்ற முடியும். ரேஷன் கார்டில் மொபைல் நம்பரை பதிவு செய்தால் மட்டுமே மாதம் வாங்கும் ரேஷன் பொருட்களை நம்மால் பெற முடியும். ஒவ்வொரு தாலுக்கா அலுவலகத்திலும், தனியாக ரேஷன் கார்டு தொடர்பான உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கும் அங்கு செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளலாம். பிறகு புதிய எண் மாற்றம் செய்த உடன், மாற்றப்பட்டதற்கான தகவல் உங்களுக்கு குறுஞ்செய்தியாக வரும்.