அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு – முக்கிய அப்டேட் பற்றிய முழு விபரங்கள்!
தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்கும் வகையில் மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றனர். அத்துடன் இப்போது புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
ரேஷன் கார்டு
தமிழகத்தில் தனிநபரின் முகவரி சான்றாகவும் அடையாள ஆவணமாகவும் ரேஷன் கார்டு உள்ளது. அத்துடன் சாதாரண மக்களுக்கு அன்றாட தேவையான உணவு பொருட்களை ரேஷன் கார்டு மூலமாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. அனைத்து குடும்பத்தினரும் ரேஷன் கார்டு வைத்திருப்பது அவசியமானதாகும். அத்துடன் தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது.
ExamsDaily Mobile App Download
இத்திட்டத்தின் மூலமாக நீங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கோ அல்லது வெளி மாநிலத்திற்கோ சென்றாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை பெற முடியும். அதனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் ரேஷன் கார்டு பெறுவதற்கான அரசு அதிகாரிகள் வீட்டுக்கு வந்து தங்களின் தகவல்கள் மற்றும் இருப்பிடங்களை உறுதி செய்த பின்பு ரேஷன் கார்டை பெற முடியும். அதனால் நீங்கள் தவறுதலாக தங்களின் ரேஷன் கார்டை தொலைத்து விட்டால் கவலை கொள்ள வேண்டாம் புதிய ரேஷன் கார்டை விண்ணப்பித்து பெற்று கொள்ள முடியும்.
Amazon நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!
தற்போது புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
1. முதலில் https://www.tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. பயனாளர் IDஐ உள்ளிட்ட வேண்டும். இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.
3. இதனை உள்ளிட்டு சுயவிவர பக்கத்திற்கு உள்நுழைய வேண்டும். இப்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் திரையில் தோன்றும்.
4. இப்போது கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதனை PDF ஆக சேமிக்க வேண்டும் அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
5. அதன் பின் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக தங்களின் ரேஷன் கார்டு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு சில நாட்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.