அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இதை செய்தால் ஸ்மார்ட் கார்டு ரத்து!
ரேஷன் கார்டு தொடர்பான புதிய விதிமுறைகள் வெளியாகி வருகிறது. அண்மையில் தகுதியற்றவர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வீணாக்குவதை விட அவர்களே ரேஷன் கார்டை ரத்து செய்து விட வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை விற்றால் ஸ்மார்ட் கார்டு ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார்.
எச்சரிக்கை பதிவு:
இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக உள்ள ரேஷன் கார்டு, இருப்பிட சான்றாக பயன்படுகிறது. மேலும் இந்த அட்டை மூலம் மலிவு விலையில் பொதுமக்கள் உணவு தானியங்களை பெற்று வருகின்றனர். மேலும் ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு என குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் கருவி மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பயோமெட்ரிக் முறையானது கடந்த 1.10.2020 முதல் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கோவை மவட்ட கலெக்டர் சமீரன் முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
இந்த பயோமெட்ரிக் முறையின் முக்கிய நோக்கம் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகளை முழுமையாகவும், முறையாகவும் சென்றடைவதை உறுதி செய்வது ஆகும். எனவே ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு நேரில் சென்று பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
நாளை (மே 8) இரவு வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!
மேலும் குடும்ப உறுப்பினர் அல்லாத பிற நபர்களிடம் ஸ்மார்ட் கார்டு வழங்குவதை தவிர்க்க வேண்டும். இருப்பினும் வயதானவர்கள், உடம்பு சரி இல்லாதவர்கள் ஆகியோர் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க முடியாத சூழலில், ஒரு நபரை அங்கீகரித்து சம்பந்தப்பட்ட தாசில்தார் அல்லது வட்ட வழங்கல் அலுவலர் மூலம் வழங்கப்படும் அங்கீகார சான்று மூலம் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
இவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு, கைரேகை பதிவாகவில்லை என்றால் ஆதார் மையங்களுக்கு சென்று தங்களது கைரேகையை புதுப்பித்து கொள்ள வேண்டும். அரசால் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை பிறருக்கு விற்பனை செய்வது பெரும் குற்றமாகும். இது குறித்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே ரேஷன் பொருட்களை வாங்கி பிறருக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்களின் ஸ்மார்ட் கார்டு ரத்து செய்யப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.