அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதார் கார்டுடன் இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஆதார் கார்டுடன் இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஆதார் கார்டுடன் இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதார் கார்டுடன் இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கார்டுகளுடன் ஆதார் அட்டையை இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும் நிலையில், இந்த செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழிமுறைகளை இப்பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் கார்டு

மத்திய அரசின் பொது விநியோகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் அமைப்பு, நாடு முழுவதும் உள்ள கார்டுதாரர்களுக்கு பல சலுகைகளை வழங்குகிறது. இந்த ரேஷன் கார்டுகளுடன் ஆதார் கார்டுகளை இணைப்பது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பலன்கள் மற்றும் உணவு தானியங்களை பெறுவதற்கு உதவி செய்கிறது. அந்த வகையில் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், செல்லுபடியாகும் பயனாளிகள் எவருக்கும் உணவு தானியங்களின் உரிமைப் பங்கு மறுக்கப்படாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு முக்கிய அறிவிப்பு – காலிப்பணியிட விபரங்கள்!

இப்போது ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31 முதல் ஜூன் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டம் ஆகஸ்ட் 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தினசரி ஊதியம் பெறுபவர்கள், தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் தங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் உணவு தானியங்களை எளிய முறையில் அணுக உதவுகிறது. இத்திட்டத்தில் மொத்தம் 80 கோடி பயனாளிகள் உள்ளனர்.

குறிப்பாக பிப்ரவரி மாத நடுப்பகுதியில், 96% பயனாளிகள் ONORC அமைப்பில் பதிவு செய்துள்ளனர். இதை 100% ஆக மாற்ற ரேஷன் மற்றும் ஆதார் இணைப்புக்கான காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று கூறி இருக்கிறார். இதற்கு முன்னதாக இந்த செயல்பாடுகளுக்கான காலக்கெடு டிசம்பர் 31, 2021 வரை இருந்து பின்னர் மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது மீண்டுமாக ஜூன் 30, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்:

  • குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல்
  • குடும்பத் தலைவரின் ஆதார் நகல்
  • அசல் அட்டையுடன், ரேஷன் கார்டின் புகைப்பட நகல் ஆகியவை தேவைப்படும்.

ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளை ஆஃப்லைனில் இணைக்க:

  • உள்ளூர் PDS அல்லது ரேஷன் கடைக்கு செல்லவும்.
  • உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷன் கார்டின் நகல் மற்றும் ஆதார் அட்டை நகல்கள் தேவைப்படும்.
  • வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால் வங்கிக் கடவுச்சீட்டின் நகலை வழங்கவும்.
  • ஆவணங்களை PDS கடையில் சமர்ப்பிக்க வேண்டும்.
    வழிமுறைகளை பின்பற்றவும்.

LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மேலுள்ள எண்களின் அர்த்தம் என்ன? முழு விவரம்!

ஆன்லைனில் இணைக்க:

  • PDS இணையதளத்தை அணுகவும்.
  • உங்கள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடவும்.
  • ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
  • அடுத்ததாக, தொடரவும் அல்லது சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
  • பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.
  • உங்கள் OTP ஐ உள்ளிட்டு கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!