அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – வெளியான அதிர்ச்சி தகவல்! உபி அரசு உத்தரவு!
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாநிலத்தில் இத்திட்டத்தில் பயன் அடைபவர்களுக்கு அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரேஷன் கார்டு
இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக வினியோகிக்கப்படுகிறது. இதையடுத்து கொரோனா கால கட்டத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் மத்திய அரசிடம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 5 கிலோ கோதுமை, அரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது. அத்துடன் வழக்கமான ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தானியங்கள் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வழங்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு உத்தரவு பிறப்பித்தது. இத்திட்டத்தின் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டது.
EPFO பயனர்கள் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்த ஆலோசனையின் முடிவில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை என 3 மாதங்களுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. மேலும் இத்திட்டம் தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு உத்தரவுப்படி, இம்மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பொருட்கள் வழங்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது. அத்துடன் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கோதுமைக்கு 2 ரூபாயும், ஒரு கிலோ அரிசிக்கு 3 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்