அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – திருமணமானவரா? உடனே இதை செய்யுங்கள்!
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். இப்போது நீங்கள் புதிதாக திருமணமானவராக இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை கட்டாயமாக செய்ய வேண்டும்.
ரேஷன் கார்டு
இந்தியாவில் அனைத்து சாமானிய மக்களுக்கும் உணவு பொருட்கள் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பேரிடர் காலங்களில் ரேஷன் கார்டு மூலமாக தான் அனைத்து நிதி உதவிகள் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. அதனால் உங்களின் ரேஷன் கார்டில் பெயர், முகவரி உள்ளிட்ட தனிநபர் விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். அத்துடன் ஏதேனும் தவறு இருப்பின் உடனடியாக திருத்த வேண்டும்.
Exams Daily Mobile App Download
மேலும் நீங்கள் புதிதாக திருமணமானவராக இருப்பின் சில திருத்தங்களை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். பொதுவாக குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் ரேஷன் கார்டில் இடம்பெற்றிருக்க வேண்டும். நீங்கள் இப்போது திருமணமானவராக இருப்பின் உங்களின் மனைவி பெயர் சேர்க்கப்பட வேண்டும். மேலும் பெண் உறுப்பினராக இருப்பின் அவரின் ஆதார் அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதாவது பெண் உறுப்பினர்கள் அவரின் ஆதார் அட்டையில் கணவரின் பெயரை சேர்க்க வேண்டும்
அதே போல் உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையின் பெயரும் இணைக்கப்பட வேண்டும். இதற்கு முதலில் நீங்கள் ஆதாரில் உங்களின் குழந்தையின் பெயரை இணைக்க வேண்டும். அதன்பின் புதிய ஆதாரை நகல் எடுத்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க உணவுத் துறை அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதனை ஆன்லைன் மூலமாக செய்ய முடியும். ஆனால் இதற்கு உங்களின் மாநிலத்தில் ஆன்லைனில் உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்கும் வசதி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.