Airtel, Jio & Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ப்ரீபெய்டு கட்டணம் மீண்டும் உயர்வு!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகியவை தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டுமாக ப்ரீபெய்ட் கட்டணத்தில் உயர்வை அமல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்டண உயர்வு
சமீப காலமாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த நிறுவனங்கள் மீண்டுமாக ப்ரீபெய்டு கட்டணங்களை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் இது ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் சுமையை ஏற்படுத்தாது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ப்ரீபெய்டு கட்டணங்கள் 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் இந்த ப்ரீபெய்ட் கட்டண உயர்வு ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாயை (ARPU) கூடுதலாக 10% அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்த டெலிகாம் அறிக்கையின்படி, அமெரிக்க பங்கு ஆராய்ச்சி நிறுவனமான வில்லியம் ஓ நீலின் இந்தியப் பிரிவின் சமபங்கு ஆராய்ச்சியின் தலைவர் வில்லியம் ஓ நீல், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்டு கட்டணங்களை மேலும் 10% முதல் 12% வரை உயர்த்த வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், இந்த ப்ரீபெய்டு திட்டங்களுக்கான குறைந்தபட்ச கட்டண உயர்வு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 200 வரை இருக்கும் என்று தெரிகிறது. அதே போல ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு ரூ.185 மற்றும் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.135 வரை கட்டணங்கள் அதிகரிக்கலாம். தவிர இந்த கட்டண உயர்வு இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. இப்போது, இந்த ரீசார்ஜ் கட்டண உயர்வு அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.