ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – ‘இதனை’ செய்வது கட்டாயம்! முக்கிய அறிவுறுத்தல்!
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மக்கள் பிரதிநிதித்துவை சட்டத்தில் 23ம் பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் 6 பி விண்ணப்பத்தின் மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்
ஆதார் எண் இணைப்பு;
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்துக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் வாக்காளர்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதன்படி, விருப்பம் இல்லாதவர்கள் நியாயமான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆதார் இணைப்பு மூலம் உண்மையான வாக்காளரை எளிதில் அடையாளம் காண முடியும். இதை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் நாள், வாக்குச்சாவடி விவரங்களை வாக்காளர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கடந்த 6ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Post Office MIS திட்டத்தில் மாதந்தோறும் ரூ.5,000 வரைக்கும் வட்டி – முழு விவரங்கள் இதோ!
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களிடம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மாநிலம் மாவட்ட, சட்டமன்றத் தொகுதிகள் அளவில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக நிகழ்ச்சிகளைத் தொடங்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர்கள் ஆதார் எண் இணைக்க முன் வருவதற்கு சிறப்பு முகாம்களும் நடத்தப்படவுள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் ஆதார் எண்ணை இணைக்கவும், அப்படி தரவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க கூடாது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு அறிவுறுத்தியுள்ளார்.