ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. UIDAI புதிய அறிவிப்பு – இதை கட்டாயம் செஞ்சுருங்க!
நாடு முழுவதும் மக்களுக்கு அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. இந்நிலையில் தற்போது UIDAI வெளியிட்ட அறிவிப்பின் படி, ஆதாரில் புதிய விவரங்களை சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை:
மக்களிடம் அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. வங்கி சேவைகளை பெறவும், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் தேவையான விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையாக ஆதார் இருக்கிறது. மேலும் ஆதார் அட்டையில் உங்களது விவரங்கள் எந்த தவறுதலும் இல்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக பெயர், முகவரி, மொபைல் எண், தந்தை பெயர், பிறந்த தேதி ஆகிய விவரங்கள் கட்டாயம் எந்தவித பிழையும் இன்றி இருக்க வேண்டும்.
அதில் எதாவது மாற்றம் இருந்தால் UIDAIன் அதிகாரபூர்வ இணையதளத்தில் அதனை மாற்றிக் கொள்ளலாம். தற்போது அனைத்து சேவைகளும் பெற ஆதார் அவசியமாகிவிட்டது. இந்நிலையில் ஆதார் முகமை (UIDAI ) தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி 10 ஆண்டுகளுக்கு முன் தனித்த ஆதார் அடையாள எண் பெற்றவர்கள், தற்போது வரை புதிய விவரங்களை சேர்க்காமல் இருந்தால், உடனே அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
சபாஷ்.. வேற லெவல் – மகளிருக்காக அரசு எடுத்துள்ள மற்றொரு அசத்தல் முயற்சி – வரவேற்கும் மக்கள்!
Exams Daily Mobile App Download
மேலும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்களின் அடையாள, இருப்பிடச் சான்றுகளை அதற்கான கட்டணம் செலுத்தி இணைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்க ‘மை ஆதார்’ இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள ஆதார் மையம் மூலமாகவோ செய்யலாம் என தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்