தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இன்று (மே 14) முதல் கோடை விடுமுறை!
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (மே 14) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை அறிவிப்பு:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் பல தளர்த்தப்பட்டு மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. முதலில் உயர்நிலை வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும் கல்வியாண்டு கால தாமதமாக தொடங்கப்பட்டதால் மே மாதம் வரை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. அதன்படி வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்ற மாதம் வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழகத்தில் மே 20 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
அதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி இன்று (மே 14) முதல் 1 ஆம் வகுப்பில் இருந்து 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் மாதம் 13-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் வழக்கம் போல செயல்படுவதால் மாணவர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.