தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே மாதம் முதல் தேதியில் இருந்து ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டு இறுதித்தேர்வுகள்:
தமிழ்நாட்டில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கபட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு கண்டிப்பான முறையில் பொது தேர்வுகள் நடக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து பொது தேர்வுகளுக்கான தேதிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவித்தது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
ரூ.9 லட்ச ஊதியத்தில் மத்திய அரசின் ஆதார் துறையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்து அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
ESIC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.1,77,000/- ஊதியம்..!
இந்த நிலையில் 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அடுத்தாக வரவுள்ள மே மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆண்டு இறுதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவிலும், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாவட்ட அளவிலும், ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.