1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய கல்வியாண்டு ஜூலை 4 முதல் ஆரம்பம்!
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் தற்போது நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்புகள் முடிந்து தேர்வுகள் நடந்து வரும் நிலையில் 2022- 2023 புதிய கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கப்படுவது குறித்து கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய கல்வியாண்டு:
ஆந்திரா மாநிலத்தில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கான இறுதி மற்றும் பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றது. இத்தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கடந்த சில கல்வி ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அவற்றை ஈடு செய்வதற்காக பல மாநிலங்கள் கோடை விடுமுறையிலும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் சில மாநிலங்கள் மாணவர்களுக்கு தற்போது நிலவி வரும் அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்கம் கருதி அதிக நாட்கள் விடுமுறை அளித்து வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் 2021-2022 கல்வியாண்டு கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 16ம் தேதி முதல் தான் தாமதமாக குறைக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் தொடங்கியது.
PM KISAN பயனாளிகளுக்கு கெடுபிடி – தொகையை திரும்ப வழங்க உத்தரவு! 6 லட்சம் ரூபாய் வரை வசூல்!
தற்போது மே 6ம் தேதி முதல் அங்கு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மே மாத இறுதி வரை தேர்வுகள் நடக்க உள்ளது. அதன் பிறகு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 2022- 2023 புதிய கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூலை 4ம் தேதி முதல் தொடங்கும் என்றும், புதிய கல்வி ஆண்டிற்கான அட்டவணையும் கல்வித்துறையால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.