1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளி நேரங்களில் மாற்றம்!
ஹரியானா மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்ப சூழ்நிலைகளுக்கு மத்தியில் 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு புதிய கல்வி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வர இருக்கிறது.
பள்ளி நேரம் மாற்றம்:
ஹரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் வெப்பமான வானிலைக்கு மத்தியில் இன்று (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பள்ளிகளின் நேரத்தை மாற்ற ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கோடை விடுமுறை முடிவடைந்த பிறகு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் இன்று (ஜூலை 1) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட நேரத்தை இன்று முதல் அமல்படுத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் கோடை விடுமுறை முடிவடைந்த பிறகு பள்ளிகள் அனைத்தும் இனி காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரை நடத்தப்படும் என்று ஹரியானா பள்ளிக் கல்வி இயக்குநரகம் (DoE) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை அனைத்துப் பள்ளிகளும் தவறாமல் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், ‘கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலை 1, 2022 முதல் ஹரியானாவில் பள்ளி நேரம் காலை 8:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
TNPSC Group1 தேர்வர்கள் கவனத்திற்கு – பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்!
இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் நிலவிய கடும் வெயில் காரணமாக கோடை விடுமுறைக்கு முன் அதாவது மே 4ம் தேதி முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை என அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது துவங்கி இருக்கும் கல்வியாண்டிலும் வெப்ப சூழல் தொடர்வதால் இதை கருத்தில் கொண்டு பள்ளி நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணி வரைக்கும் மாற்றியமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.