1 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு!

0
1 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - கோடை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு!
1 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - கோடை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு!
1 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை, பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்புகளை கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2 முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாநில அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

கோடை விடுமுறை:

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுமையாக பள்ளிகள் செயல்படாமல் ஆன்லைன் வாயிலாக பள்ளிகள் செயல்பட்டு வந்தது. இந்த ஆண்டும் முதல் இரண்டு மாதங்கள் பள்ளி நடைபெறாமல் ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. 3 ஆம் அலை கொரோனா பாதிப்பு முடிவடைந்து தற்போது வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வழக்கமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி மாத இறுதிக்குள் தேர்வுகள் முடிவடையும், இதே போல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்குள்ளாகவே தேர்வுகள் முடிவடைந்து விடும். இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தேர்வுகள் தாமதமாக மே மாதம் வரை நடைபெறவுள்ளது.

தமிழக அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இதனால் மாணவர்களுக்கு குறைந்த நாட்களே கோடை விடுமுறையாக அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் மே 2 முதல் பள்ளிக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று, மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 12 வரை கோடை விடுமுறையை அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டது. அந்த சுற்றறிக்கையில் புதிய கல்வி ஆண்டு ஜூன் 13ஆம் தேதி திங்கட்கிழமை முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை குறிப்பிட்டு உள்ளது. இருப்பினும், விதர்பாவில் கடுமையான வெப்பநிலை காரணமாக ஜூன் 27 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.

10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – 96 காலிப்பணியிடங்கள்.. !

மேலும் அம்மாநிலத்தில் தேர்வுகளைப் பொறுத்தவரை, 1 முதல் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஆஃப்லைனில் தேர்வுகளை நடத்துகின்றன. மாநில வாரியம் ஏற்கனவே மாநில வாரியத் தேர்வுகள், SSC மற்றும் HSC தேர்வு 2022 ஆகியவற்றை நடத்தியது. மேலும் 9 மற்றும் 11ம் வகுப்புக்குகளுக்கு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது, மகாராஷ்டிரா SSC மற்றும் HSC 2022 தேர்வு முடிவுகள் மே மாதம் தற்காலிகமாக அறிவிக்கப்படும். தேர்வு முடிவு தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடுமையான வெயில் காரணமாக, மாநிலத்தில் பள்ளி நேரத்தை குறைக்க அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!