தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 முதல் தொடக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளன. அத்துடன் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வுக்கான திருத்தும் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் நடப்பு கல்வியாண்டு கடந்த செப்டம்பர் மாதத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவலின் 3ம் அலையின் காரணமாக ஜனவரி மாதம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தபடி தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
Exams Daily Mobile App Download
இந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் தேர்வில் முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க ஏராளமான பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் மோடி எடுக்கும் முடிவு என்ன?
இதையடுத்து பொதுத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது. மேலும் தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதத்துக்குள் வெளியாகும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கான முன்னேற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுக்குரிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் வருகிற ஜூன் 2ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.