தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் இறுதிவரை நடைபெற்றது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் 3வது அலை, கடந்த ஜனவரி மாத இறுதியில் படிப்படியாக குறைந்தது. இதனால் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. மேலும் நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்து, பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டார். இந்த அறிவிப்பு படி, மாநிலம் முழுவதும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, மே மாதம் இறுதி பொதுத்தேர்வு நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜூன் 13ம் தேதி முதல் 2022-2023 ம் ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், 2021-22ஆம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடத்தி முடிக்கப்பட்டது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அதன்பின், கடந்த 1ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.

இந்தியாவில் ரயில்வே துறையில் 1.5 லட்சம் பேரை பணியமர்த்த திட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி, வரும் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும்.எனவே மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பள்ளிகள் வாயிலாக பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஜூன் 12ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதனிடையே, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!