தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் கவனத்திற்கு – அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

0
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் கவனத்திற்கு - அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் கவனத்திற்கு - அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் கவனத்திற்கு – அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழகத்தில் உள்ள அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அது குறித்த முழு விவரத்தையும் கீழ் வரும் தொகுப்பில் முழுமையாக பார்ப்போம்.

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகம் இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் மற்றும் படித்து முடித்த அனைவரும் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இது தவிர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்து இருந்ததால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் பல வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளிவந்து உள்ளது.

Exams Daily Mobile App Download

இது தவிர தற்போது மத்திய அரசின் கீழ் இயங்கும் அஞ்சல் துறையும் தங்களின் சார்பில் வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. அது என்னவென்றால், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு முகவா் பணிக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட முகவரியில் வசிக்கும் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 முதல் 50 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் அதற்கு சுய தொழில் செய்வோா், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டலப் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், சுய உதவிக் குழுக்களில் செயல்படுவோர், கிராமத் தலைவர், கிராமசபை உறுப்பினர்கள் ஆகியோர்கள் விண்ணப்பிக்கலாம்.

‘கண்டிப்பாக சித்ராவை ஹேம்நாத் தான் கொலை செய்திருக்க வேண்டும்’ – ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

அதனை தொடர்ந்து, இந்த வேலைக்கு பணியாளர்கள் நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா் என்றும், பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். தோ்வாகும் முகவா்கள் மட்டும் ரூ. 5 ஆயிரத்தை காப்பீட்டுத் தொகையாக தேசிய சேமிப்புப் பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அருகேயுள்ள அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். அதனை தொடர்ந்து ஏஜென்சி காலம் நிறைவு பெறும்போது அத்தொகை வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், அருகில் உள்ள அஞ்சலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து மே 17 ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி-628501 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!