10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 20 முதல் துணைத்தேர்வுகள் துவக்கம்!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 20ம் தேதி முதல் தேர்வுகள் துவங்க இருக்கிறது.
துணைத் தேர்வு அட்டவணை
மத்தியப் பிரதேச இடைநிலைக் கல்வி வாரியம் (MPBSE) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில், உயர்நிலைப் பள்ளி அல்லது 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 21 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதே வேளையில், மேல்நிலைப் பள்ளி அதாவது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஜூன் 20 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அட்டவணைப்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், 12வது வகுப்பு துணைத் தேர்வர்களுக்கு ஜூன் 20 அன்று அனைத்து பாடங்களுக்கும் ஒரே நாளில் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. அதே நேரத்தில் 10 ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூன் 21 முதல் ஜூன் 30 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தொழிற்கல்வி படிப்புக்கான துணைத் தேர்வு ஜூன் 21 முதல் ஜூன் 27 வரை நடத்தப்பட இருக்கிறது. இதற்கிடையில் மத்தியப் பிரதேச கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29 அன்று அறிவிக்கப்பட்டன. இதில் 10 ஆம் வகுப்பில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 59.54 ஆகவும், 12 ஆம் வகுப்பில் 72.72 சதவீதமாகவும் இருந்தது.
பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜூன் 15 முதல் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவக்கம்!
இது தவிர இந்த ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் வழங்கும் திட்டத்தை அரசு திருத்தியது. அந்த வகையில் திருத்தப்பட்ட மதிப்பெண் திட்டத்தின்படி, உயர்நிலை மற்றும் மேல்நிலை தேர்வுகளுக்கு 80 மதிப்பெண்கள் தியரி பாடங்களுக்கும், மீதமுள்ள 20 மதிப்பெண்கள் நடைமுறை மற்றும் திட்டப்பணிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நடைமுறைக் கூறுகளைக் கொண்ட பாடங்களுக்கு 12ம் வகுப்பு கோட்பாடு கூறு 70 மதிப்பெண்களுக்கும், நடைமுறைகளுக்கு 30 மதிப்பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.