தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு – துணைத்தேர்வு குறித்த உத்தரவு!
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு நடப்பு மாதம் மற்றும் அடுத்த மாதங்களில் துணை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் இந்த துணை தேர்வு குறித்து பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
முக்கிய உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக, கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறவில்லை. ஆனால் 2021- 2022 கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியது. இதனால் 10 முதல் 12ம் பொதுத் தேர்வுகள் மே மாதம் இறுதி வரை நடைபெற்றது. மேலும் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த மாதம் வெளியானது. இந்த முடிவுகளின் அடிப்படையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வியாண்டில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். இதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டுகளை விட குறைவாக இருந்தது.
TANGEDCO தமிழக மின்வாரியத்தில் 5,318 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை ரத்து – ஷாக் உத்தரவு!
இந்த நிலையில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன் அடிப்படையில் 2021-22-ஆம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 8-ந் தேதியும் துணை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மேலும் துணை தேர்வு எழுத, தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று, ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 4 வரை, ஞாயிறு தவிர மற்ற நாட்களில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த துணை தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், இந்த துணைத் தேர்வில் தேர்ச்சி அடையும் பொருட்டு, பாட சார்ந்த ஆசிரியர்கள் தேர்வு முடியும் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு படித்த பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்வில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை தலைமை ஆசிரியர்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.