தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – நாளை செய்முறை தேர்வு தொடக்கம்!
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் செய்முறை தேர்வு நாளை (ஏப்ரல் 25) தொடங்கவுள்ளது. சுமார் 19 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு:
தமிழகத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. இந்த ஆன்லைன் கல்வி ஸ்மார்ட்போன் வைத்துள்ள மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது. மற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி எட்டா கனியாகவே இருந்த நிலையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு கல்வி தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவே கற்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் வேலை இல்லாமல் தவிக்கும் பட்டதாரிகள் கவனத்திற்கு – TNPSC அறிவித்த வேலைவாய்ப்புகள்!
இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களும் ஊரடங்கு காலத்திலும் வீட்டிலிருந்து கல்வி பயின்று வந்தனர். இந்த ஆன்லைன் கல்வியில் மாணவர்களின் முழு கற்றல் திறன் குறித்த அச்சம் எழுந்த நிலையில் விரைந்து பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி தேர்வுக்கான கால அட்டவணை கடந்த மாதம் வெளியானது. 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கவுள்ளது. மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25ம் தேதியான நாளை தொடங்க உள்ளது. முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.