தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் முடிந்த நிலையில் தற்போது பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அத்துடன் தற்போது 10 முதல் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுக்குரிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை முதல் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
இதில் தெரிவித்ததாவது, தமிழகத்தில் தற்போது 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும். அத்துடன் ஏப்ரல் 25ம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.
NTRO நிறுவனத்தில் 200+ காலிப்பணியிடங்கள் – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தற்போது பொதுத்தேர்வு நடைபெறுவதற்கான நாட்கள் மிகவும் குறைவாக உள்ளது. அதனால் பொதுத்தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் வினாத்தாள்கள் பாதுகாப்புடன் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தேர்வுக்குரிய நுழைவு சீட்டு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது இந்த ஆண்டுக்கான பொதுதேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.