தமிழகத்தில் 100 நாள் வேலை பார்ப்பவர்கள் கவனத்திற்கு – விவசாய பணிகளில் ஈடுபடுத்த கோரிக்கை!
தமிழகத்தில் விவசாய பணிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்:
இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை அளிக்கும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற மக்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் இத்திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் வேலை வாய்ப்பையும் பெற்று வருகின்றனர். கடந்த வருடங்களில் நிலவிய கொரோனா ஊரடங்கு காலங்களிலும் கிராமப்புற மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வேலை அளிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
பொதுவாக இந்த 100 நாள் வேலை திட்டத்தில் நிலம் தூர்வாருதல், தடுப்பணைகள் உருவாக்குதல், ஏரிகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெறும். கடந்த ஆண்டுகளில் 100 நாள் வேலையாட்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்து வந்தது. மத்திய அரசு ஊதியத்திற்கான குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து வேலையாட்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் வருகிற மே 13ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
இந்த நிலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மாதனூர் ஒன்றிய வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை சாா்பாக தேவலாபுரம் கிராமத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் தோட்டக்கலைத் துறை உதவி ஆய்வாளர் வேளாண்மை குறித்து மக்களுக்கு விளக்கம் அளித்தார். மேலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.