100 நாள் வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு – இதை செய்யாவிட்டால் சம்பளம் ரத்து!
இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக 2005ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் கவனத்திற்கு
இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த 2005ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தேச தந்தையான காந்தி பிறந்த நாளை முன்னிட்டு காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று மாற்றப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வரை வேலைவாய்ப்பு கிடைக்கும். இது வேலைவாய்ப்பற்றவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
Exams Daily Mobile App Download
இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு நீர் வழித்தடங்களை சீரமைப்பது, புதிய பண்ணைக் குட்டைகளை அமைப்பது, மரக்கன்றுகள் நட்டு வன வளம் பெருக்குவது, கிராமங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். இதுவரை இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் வருகைகையால் தான் பதிவு செய்யப்பட்டு ஊதியம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருகை பதிவேடு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இந்த வகுப்புகள் மூடல் – கல்வித்துறை ஷாக் அறிவிப்பு!
அதன் தொடர்ச்சியாக தற்போது இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் அவர்கள் பணிபுரியும் நேரத்தை Nrega என்ற National Mobile Monitoring System APP வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தில் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் வருகையினை கடந்த மே மாதம் 16ம் தேதி முதல் வருகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இவர்கள் எத்தனை மணி நேரம் வரை பணிபுரிகிறார்கள் என்பதும் பதிவு செய்யப்படுகிறது. அதனால் இத்திட்டத்தில் முறைகேடு ஏற்படுவது தடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.