1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு!
கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி துவங்கும் என்று அந்த மாநில அரசு தெரிவித்து உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள்:
இந்தியாவில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கபட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு கண்டிப்பான முறையில் பொது தேர்வுகள் நடக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து பொது தேர்வுகளுக்கான தேதிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவித்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த ஆண்டு பி.யூ.சி. 2ஆம் ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பி.யூ.சி. 2ஆம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று (ஏப்ரல் 22) தொடங்கி நடக்கிறது.
மேலும் இந்த பொதுத் தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்களுக்கு விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து மாநிலத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு மே மாதம் தொடங்குகிறது. மேலும் மே மாதம் 16ஆம் தேதி பள்ளி மற்றும் பி.யூ.கல்லூரிகள் திறக்கப்படும். முதல் பருவ வகுப்புகள் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறும். 2வது பருவ வகுப்புகள் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வரை நடக்கும். அதனை தொடர்ந்து வருகிற கல்வி ஆண்டில் தசரா பண்டிகை விடுமுறை அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை இருக்கும். கோடை விடுமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி ஆரம்பித்து மே மாதம் 28ஆம் தேதி வரை இருக்கும் என்று அறிவித்து உள்ளனர்.
TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு – இன்னும் 4 நாட்கள் மட்டுமே!
மேலும் அடுத்த கல்வி ஆண்டில் மொத்தம் 60 அரசு விடுமுறை நாட்கள் வருகின்றன. 256 நாட்கள் வகுப்புகள் நடைபெறும். அரசு பள்ளி-கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வருகிற மே மாதம் 16ஆம் தேதி ஆரம்பித்து ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், மேலும் சூழ்நிலை காரணமாக கொரோனா பரவலால் பள்ளிகளை மூடப்பட்டாலும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியுள்ளனர்.