EPFO ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – புதிய மாற்றம் அறிமுகம்!
ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் EPFO புதிய மாற்றம் ஒன்றை கொண்டுவரவுள்ளது. மேலும், இந்த மாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் ஜூலை 29,30 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
EPFO திட்டம்:
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திட்டம் ஓய்வூதியதாரர்களுக்கு பல சிறப்பான நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. கிட்டத்தட்ட 73 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதில் EPFO ஒரு சிறிய மாற்றத்தை கொண்டு வர இருக்கிறது. மேலும், EPFO திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாக வரும் ஜூலை 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதாவது, நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஓய்வூதியம் பெறும்படியான மத்திய ஓய்வூதிய வழங்கல் முறையை கொண்டுவருவதற்கான ஒப்புதல் இந்த கூட்டத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரைக்கும் ஓய்வூதியதாரர்கள் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு நேரத்தில் தான் ஓய்வூதியம் பெற்று வந்தனர். இதனால், மத்திய அரசு மத்திய ஓய்வூதிய பகிர்வு முறையை கொண்டு வர திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் நாளை (ஜூலை 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதாவது, 138 மண்டல EPFO அலுவலகத்தில் இருந்தும் ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் பெறப்பட்டு ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்பட்டால் அனைத்து பிஎப் கணக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டு போலியான கணக்குகள் உருவாக்கப்படுவது குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர் பிஎப் கணக்கில் 6 மாதத்திற்கும் குறைவாக டெபாசிட் செய்திருந்தால் அந்த பணத்தை வாடிக்கையாளர் எடுக்கும்படியான வசதி வழங்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.