ஜனவரி முதல் ஏடிஎம்களில் கூடுதல் கட்டணம் வசூல் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களில் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளை மீறுவோருக்கு புதிய விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு:
இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து ஐந்து நிதி மற்றும் நிதி அல்லாத இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம். அதற்கு மேல் செய்யப்படும் பணபரிவர்த்தனைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளை மீறும் பயனர்களுக்கு புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அபராத தொகை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 6ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு அனுமதி!
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் அதிக பரிமாற்றக் கட்டணத்தை வங்கிகளுக்கு ஈடுகட்டவும், பொதுச் செலவுகள் அதிகரிக்கவும், ஒரு பரிவர்த்தனைக்கான வாடிக்கையாளர் கட்டணத்தை ₹21 ஆக அதிகரிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த உயர்வு ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு பரிவர்த்தனைக்கு ₹20 விகிதத்தில் இருந்து 21 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
மேலும் ஏடிஎம்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஏடிஎம் பராமரிப்புக்கான செலவுகள் அதிகரித்து வருவதால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஒரு பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் கடந்த ஆகஸ்ட் 1, 2021 முதல் ₹15ல் இருந்து ₹17 ஆகவும், மையங்கள் முழுவதும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ₹5ல் இருந்து ₹6 ஆகவும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும், இந்த செய்தியை கேட்டதும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.