தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? ATM கார்டு உண்டு!
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் அட்டை வழங்குவதாக சென்னை பொது தபால் அலுவலக தலைமை போஸ்ட் மாஸ்டர் அவர்கள் கூறியுள்ளார்.
ஏடிஎம் அட்டை:
மக்களின் தேவைக்கேற்ப உத்திரவாத வருமானத்துடன் பாதுகாப்பான முதலீடுகளை தபால் துறை வழங்கி வருகிறது. முதலீட்டாளர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக இது போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது. தற்போது பொது தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் அட்டை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் புதிதாக சேமிப்பு கணக்கு துவங்குபவர்கள் மற்றும் ஏற்கனவே சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – இரவு ஊரடங்கு நேரம் குறைப்பு!
தபால் அலுவலகத்தில் வெவ்வேறு வட்டி வீதத்துடன், பல சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் அலுவலகம் வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் ஒரு சேமிப்பு கணக்கை தொடங்கி, அதன் சிஐஎப் அடையாள எண்ணை, இதர திட்டங்களுடன் இணைத்து கொள்ளலாம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சேமிப்பு கணக்குடன் ஏடிஎம் கார்டு வசதி, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகள், வாடிக்கையாளர் வேண்டுகோள் அடிப்படையில் தபால் அலுவலகம் வழங்குகிறது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து தற்போது சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தபால் அலுவலகத்தை அணுகி ஏடிஎம் கார்டு வசதி மற்றும் இன்டர்நெட், மொபைல் வங்கி வசதிகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தபால் அலுவலக ஏடிஎம்களில் இலவசமாக பண பரிவர்த்தனை செய்து கொள்ளும் வசதியை இந்திய தபால் துறை வழங்கியுள்ளது என சென்னை பொது தபால் அலுவலக தலைமை போஸ்ட் மாஸ்டர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.