தமிழகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பணி – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பணி:
தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சி அமைந்தாலும், அந்த ஆட்சியின் சாதனைகளை, திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்வது, செய்தி மக்கள் தொடர்புத்துறை தான். அந்தத் துறையில் உள்ள உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பதவிக்கான நியமனங்கள் எப்போதும் நேரடியாகவே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இதுவரை நேரடியாக நியமித்த நிலையில் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ, பிஎஸ்சி இதழியல், மாஸ் கம்யூனிகேசன், விசுவல் கம்யூனிகேசன், மக்கள் தகவல் தொடர்பு, விளம்பரம்,மல்டி மீடியா, மீடியா சயின்ஸ் படித்திருக்க வேண்டும். பிஜி டிப்ளமோ இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் படித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் டைப்ரைட்டிங், தமிழ், ஆங்கிலம் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தெரிந்த 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாதம் ரூ.1500 உதவித்தொகை!
இதையடுத்து 2 ஆண்டுகள் மக்கள் தொடர்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியும் நீக்கப்பட்டுள்ளது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அவ்வபோது தற்காலிக விதிகளில் திருத்தங்கள் செய்யப்படும். அந்த வகையில், நேரடி நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வின் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டும். அதாவது 1:1 என்ற விகிதத்தில் (50% நேரடி நியமனம், 50% பதவி உயர்வு, பணி மாறுதல் நியமனம்) நிரப்ப வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணி நியமனம் செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.