சென்னையில் ரூ.30,000/- சம்பளத்துடன் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant, Stenographer என 05 காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப நாளை (நவ.23) கடைசி தேதி ஆகும்.
கடைசி தேதி அறிவிப்பு:
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சென்னையில் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (NIEPMD) செயல்பட்டு வருகிறது. அதில் காலியாக உள்ள Assistant, Stenographer பணிகளுக்கு புதிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு கொடுக்கப்பட்ட தகுதிகளில் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1591 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதியம் – அரசாணை வெளியீடு!
அதன்படி NIEPMD நிறுவனத்தில் Assistant, Stenographer பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு Hindi Consultant பணிக்கு அதிகபட்சம் 50 வயதிற்குள்ளாகவும், Stenographer பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்குள்ளாகவும் இருக்க வேண்டும். மேலும் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி கொடுக்கப்பட்டுள்ளது.
TCS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!!
அதன் படி Data Entry Operator பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Assistant & Hindi Consultant பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் Stenographer பணிக்கு Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கு மாத சம்பளமாக Data Entry Operator பணிக்கு ரூ.16,000/,Hindi Consultant பணிக்கு ரூ.30,000/, Stenographer பணிக்கு ரூ. 25,000/, Assistant பணிக்கு ரூ.20,000/ மாத சம்பளம் வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம். மேலும் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 23.11.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.