தமிழகத்தில் விரைவில் சட்டசபை கூட்டம் – பட்ஜெட் தாக்கல்!!
தமிழகத்தில் விரைவில் சட்டசபையை கூட்ட அரசு முடிவு செய்துள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபை கூட்டத்தை தொடங்க வேண்டும் என்பதால் எந்த தேதியில் நடத்தலாம் என்பது பற்றி அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது.
சட்டசபை கூட்டம்:
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் புதிய அரசு தலைமையேற்றுள்ளது. அதன் படி முதல் சட்டசபை கூட்டம் கடந்த மே 11ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) மற்றும் சபாநாயகர் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். கூட்டத்தில் புதிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துரையும் வழங்கப்பட்டது. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!
தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 14ம் தேதியுடன் முடிவடைவுள்ளது. இதன் பிறகு ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் அடுத்த சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபையை தொடங்க வேண்டும் என்பதால் எந்த தேதியில் சட்டசபையை கூட்டலாம் என்பது பற்றி அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது. இந்த மாதத்துக்குள் சட்டசபை கூட்டப்படும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
TN Job “FB Group” Join Now
கொரோனா தொற்று பரவல் காலம் என்பதால் கோட்டையில் உள்ள சட்டசபை வளாகத்தில் கூட்டத்தை நடத்தாமல் கலைவாணர் அரங்கில் தனிமனித இடைவெளியுடன் கூட்டத்தை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் முழு பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும், திட்டங்களும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.