10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
அசாம் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 11ம் தேதி நடைபெற இருந்த 10, 12 ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு ஒத்திவைப்பு :
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. மாநில அரசுகள் நோய் தடுப்பு பணிகளை செய்து வருகின்றன. தினந்தோறும் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு மையங்களை ஏற்படுத்தி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்குகளை அறிவித்து மக்கள் நடமாட்டத்தை குறைத்து சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு முயற்சித்து வருகிறது.
ஏற்கனவே பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றன. மேலும் கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைத்து வருகிறது. இந்தியாவில் இன்று மட்டும் 3.57 இலட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாணவர்களின் நலன் கருதி கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்து வருகின்றன.
கொரோனா சிகிச்சை பணியில் மருத்துவ மாணவர்கள் – மத்திய அரசு திட்டம்!!
இதனை தொடர்ந்து அசாம் மாநிலம் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளது. மாநிலத்தில் புதிதாக 2,385 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் அசாம் மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை தினசரி உயர்வதால் மே 11 அன்று நடக்கவிருந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நிலையை கொண்டு பொதுத்தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்மாநிலத்தின் கல்வி வாரியத் தலைவர் சுரஞ்சனா சேனாதிபதி தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்