இன்று முதல் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மாநில அரசு வெளியீடு!!

0
இன்று முதல் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - மாநில அரசு வெளியீடு!!
இன்று முதல் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - மாநில அரசு வெளியீடு!!
இன்று முதல் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மாநில அரசு வெளியீடு!!

அசாம் மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அரசு மக்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று:

அசாம் மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 30ம் தேதி வரை மக்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை – கல்வித்துறைக்கு கோரிக்கை!!

நிலையான கட்டுப்பாடுகள்:

  • மாவட்டங்களில் ஏதேனும் கூட்டங்கள் இருந்தால் மாவட்ட அதிகாரிகள் அனுமதியுடன் திறந்த வெளியில் நடத்தலாம்.
  • முகக்கவசம் அணிவது, கை சுத்திகரிப்பானை பயன்படுத்துவது, தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
  • பொது வெளியில் நடைபெறும் கூட்டங்களில் அதிகபட்சம் 50% நபர்கள் அல்லது அதிகபட்சம் 400 நபர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
  • அரங்கங்களில் 50% நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • திறந்த / மூடிய இடங்களில் எந்த பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • இறுதி சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • மால்கள் / வாராந்திர சந்தை, அனைத்து சந்தை இடங்கள் / பல்பொருள் அங்காடிகள் / கடைகள் மாலை 6.00 மணிக்குள் மூடப்பட வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அரசு மற்றும் தனியா நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை ஊக்குவிக்க வேண்டும். அதிகாரிகளை தவிர, 50% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்து பணியாற்ற முடியும்.
  • கர்ப்பிணிப் பெண் ஊழியர்கள் மற்றும் 5 வயது அல்லது அதற்கு குறைவான குழந்தைகளைக் கொண்ட பெண்கள் தங்கள் பதவியை பொருட்படுத்தாமல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
  • பள்ளிகள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் வகுப்புகளை வழங்க வேண்டும்.
  • ஆட்டோ ரிக்‌ஷாக்கள், சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மற்றும் டாக்சிகள் ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகளுடன் மட்டும் இயங்க வேண்டும்.
  • நகர பேருந்துகள், உள் மாவட்டம், மாவட்டங்களுக்கு இடையேயான மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் 50% இருக்கை வசதியுடன் இயக்க அனுமதிக்கப்படும்.
  • கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம், கையுறைகள் அணிய வேண்டும் மற்றும் சமூக தூரத்தை பராமரிக்க வேண்டும். சமூக தூரத்தை பராமரிப்பதற்கான பொறுப்பு கடை உரிமையாளர் மீது இருக்கும், அவ்வாறு செய்யத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!