பம்பர் லாட்டரி.. தூய்மையான மாவட்டத்திற்கு ரூ.100 கோடி பரிசு – அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு!
மாநிலத்தில் மாவட்டத்திற்கு இடையே தூய்மைக்கான போட்டிகள் நடைபெற இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.100 கோடி வரை பரிசு வழங்கப்படும் என அசத்தலான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
தூய்மை
அசாம் மாநிலத்தில் தூய்மை இயக்கத்தின் சார்பாக கடந்த மாதம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள கும்தாய் தொகுதியில் 172 கிராமங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் தூய்மைக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் தற்போது வெற்றி பெற்ற கிராமங்களுக்கு அம்மாநில முதல்வர் பரிசுகளை வழங்கினார். இதில் முதல் பரிசாக வெற்றி பெற்ற கிராமத்திற்கு கான்கிரீட் சாலை போடப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 2ம் பரிசாக 10 லட்சமும், 3ம் பரிசாக எம்எல்ஏ மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் தெரிவித்துள்ளதாவது, மாநிலத்தில் 125 மாவட்டத்திற்கும் தூய்மைக்கான போட்டி நடத்தப்பட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
HDB Financial Service-ல் வேலை வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!
மேலும் இதற்காக நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையே ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதில் வெற்றி பெறும் மாவட்டத்திற்கு அம்மாவட்டத்திற்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.100 கோடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.