புதிதாக 40 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை – மாநில அரசு அறிவிப்பு!
அசாம் மாநிலத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள 40 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் காவல் துறையில் பணியாற்றும் போது இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் மூலமாக நாடு முழுவதும் உள்ள மக்கள் எங்கிருந்தும் பயோமெட்ரிக் மூலமாக ரேஷன் பொருள்களை வாங்கி கொள்ளலாம். இந்நிலையில் அசாம் மாநிலத்திலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் புதிதாக 40 லட்சம் பேர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். அவர்களுக்கு உடனே ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் அசாமில், கடந்த புதன்கிழமை குவஹாத்தியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 700 உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்படும். மேலும் இந்த திட்டம் மூலமாக மாநிலத்தின் 5 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
மின்தடை அறிவிப்பு.. தமிழகத்தில் டிசம்பர் 10 இந்த பகுதிகளில் Current Cut – உங்கள் ஏரியாவும் இருக்கா!
Exams Daily Mobile App Download
மேலும் 1985 ஆம் ஆண்டு முதல் அசாம் காவல்துறையில் பணியாற்றிய உயிர்நீத்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. ஆனால் அரசு வேலை வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு 7 வது ஊதிய ஆணையத்தின் கீழ் பணி வழங்கப்படும் என தெரிவித்த அவர், அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.