நாளை முதல் 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – அசாம் அரசு உத்தரவு!
அசாம் மாநில அரசு கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாகவும், பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கு முழு தடை விதிக்கப்படுவதக்கவும் தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜோர்ஹாட், கோலாகாட், சோனித்பூர், பிஸ்வநாத் மற்றும் லக்கிம்பூர் ஆகிய 5 மாவட்டங்களும் மொத்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஜூலை 20 ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். துப்ரி, சிராங், உடல்கூரி, பார்பேட்டா, சிவசாகர், பக்ஸா, கம்ரூப், டாரங், மற்றும் திப்ருகர் ஆகிய 27 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து உள்ளது. மேலும், கோல்பாரா மற்றும் மோரிகான் மாவட்டங்கள் சிறிய அளவிலான பாதிப்பு தொடர்கின்றது.
தமிழக அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் எச்சரிக்கை!!
பாதிப்புகள் குறைந்து உள்ள பகுதிகளில் சில தளர்வுகளை அரசு அளித்துள்ளது. இந்த வாரத்தில் பக்ரீத் பண்டிகை வர இருப்பதால் தளர்வுகள் அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்தது. ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் கொரோனா சோதனையை அரசு தொடங்கும் என்று அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் கேஷாப் மகாந்தா தெரிவித்தார்.
ஊரடங்கு பகுதியில் தடை செய்யப்பட்டவை:
- கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களில் முழு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.
- அனைத்து பணியிடங்கள், வணிக நிறுவனங்கள், மளிகை பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்கும் கடைகள், உணவகங்கள், தாபாக்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட ஷோரூம்கள் போன்றவை அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படும்.
- தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
- திருமண மற்றும் இறுதி சடங்குகள் உள்ளிட்ட பொது கூட்டங்களும் தடை செய்யப்படும்.
ஊரடங்கு பகுதியில் அனுமதிக்கப்பட்டவை:
- ஐந்து மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களின் இயக்கம் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பகுதியில் அனுமதிக்கப்பட்டவை:
- பாதிப்பு குறைந்து உள்ள மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு இருக்கும், குறைந்து வரும் பாதிப்புகளை கொண்ட மாவட்டங்களில் மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு இருக்கும்.
- அனைத்து பணியிடங்கள், வணிக நிறுவனங்கள், மளிகை பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்கும் கடைகள், உணவகங்கள், தபாக்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட ஷோரூம்கள் போன்றவை மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். பாதிப்புகள் இல்லாத மாவட்டங்களில் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.
TN Job “FB Group” Join Now
- கட்டாயமாக கோவிட் தடுப்பு விதிமுறைகளுடன் வாகனங்கள், பொது போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
- திருமணம் மற்றும் இறுதி நிகழ்வுகளில் அதிகபட்சம் 10 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மாநிலம் முழுவதிற்குமான விதிகள்:
- அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, அனைத்து மாவட்டங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு மக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
- பக்ரீத் பண்டிகையின் போது மதத்தலைவர்கள் உட்பட ஒரே நேரத்தில் ஐந்து பேர் மட்டுமே மசூதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
- எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
- அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோத உற்பத்தி மற்றும் நாட்டு மதுபானங்களை விற்பனை செய்வதற்கு எதிராக மாநில கலால் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.