1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு அறிவிப்பு!!
அசாம் மாநிலத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அடுத்த வகுப்புகளுக்கு தரம் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அடுத்த கல்வியாண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வின்றி தேர்ச்சி:
நாடு முழுவதும் பள்ளிகள் கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து மூடப்பட்டு, வகுப்புகள் டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன. பின்னர் நோய்த்தொற்று குறைந்த நிலையில், பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே இருந்ததால் பிற மாநில அரசுகளை போலவே, அசாம் கல்வி வாரியமும் 10 ஆம் வகுப்புக்கான பாடத்திட்டங்களைக் குறைப்பதாக அறிவித்திருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை தேர்வுகள் இல்லாமல் அடுத்த வகுப்புகளுக்கு தரம் உயர்த்த அசாம் அரசு முடிவு செய்துள்ளது. புதிய கல்வி அமர்வு ஏப்ரல் 1 முதல் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு, அசாம் இடைநிலைக் கல்வி வாரியம் ஏற்கனவே அதன் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்வுகள் மே 11 முதல் தொடங்கி ஜூன் 1 ஆம் தேதியுடன் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – கல்வி அதிகாரிகள் உத்தரவு!!
ஏற்கனவே தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா தொற்றுநோய் காரணமாக பல மாநிலங்களும் இந்த ஆண்டு தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு தரம் உயர்த்தி உள்ளன.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்