தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.2,25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!
இந்திய வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (ASRB), மற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை (DARE) இருந்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Chairperson பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ASRB & DARE |
பணியின் பெயர் | Chairperson |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ASRB காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Chairperson பணிகளுக்கு என்று பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ASRB கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் PhD பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது பணியாற்றும் விஞ்ஞானிகள்/ தொழில்நுட்ப வல்லுநர்கள்/ கல்வியாளர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
DARE முன் அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஓய்வு பெற்ற அல்லது பொது நிர்வாகம் அல்லது விவசாயம் அல்லது தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ள அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
DARE வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 62 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்ட வயது தளர்வுகள் பற்றிய கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
Join Our TNPSC Coaching Center
ASRB ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு ஊதிய அளவின்படி Level-17, அடிப்படை ஊதியமாக ரூ.25,000/- அளிக்கப்படும். மேலும் கூடுதல் தொகையும் ஊதியத்துடன் வழங்கப்படுவதாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது..
ASRB தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Search-cum-Selection Committee (SCSC) மூலம் தகுதி மற்றும் திறமையுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், Appointment Committee of Cabinet (ACC) மூலம் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
DARE விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக நிரப்பிய பின் கேட்கப்பட்ட ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுத்துள்ள கால அவகாசம் 02.02. 2022 அன்றுடன் முடிவடைகிறது.