தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வலுவடைந்த “அசானி” புயல்!

0
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வலுவடைந்த
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வலுவடைந்த "அசானி" புயல்!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வலுவடைந்த “அசானி” புயல்!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள அசானி புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது மேலும் நகர்ந்து ஒடிசா மற்றும் ஆந்திர கடல் பகுதிகளை நெருங்க கூடும். அத்துடன் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கியது. தமிழகத்தில் 113 டிகிரியை வெயில் தாண்ட வாய்ப்பு உள்ளதாகவும் இது 25 நாட்கள் நீடிக்கும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை அசானி புயலாக உருவானது.

‘நான் மர்மமான முறையில் இறந்தால்’ – உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலோன் மஸ்க் பரபரப்பு ட்வீட்!

மேலும் இந்த புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் அசானி புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அத்துடன் இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலத்தில் கடலோர பகுதியில் சென்றடையும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் நாளை முதல் 3 நாட்களுக்கு கடலோர ஒடிசா பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் ஆந்திர பகுதிகளில் நாளை மாலையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!